உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவர் முரளி வாலே ஹவுஸ்லா பாம்பு கடிக்கபட்டதால் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாகப்பாம்பு வலையில் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்ததும், அவர் தனது குழுவுடன் ஜலால்பூர் பகுதியில் சென்றுள்ளார். அப்போது பாம்பு மீட்பு பணியில் ஈடுபட்டபோது, நாகப்பாம்பு அவரை திடீரென கடித்துவிட்டது.

பாம்பு கடித்த உடனே அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதால், அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் கூறுகையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அதிக ஆபத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி தெரிந்ததும் அவரை பின்தொடர்கிற ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

 

முரளி வாலே ஹவுஸ்லா யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கொண்டவர். இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் பாதுகாப்பாக மீட்டு காட்டிற்குள் அனுப்பியுள்ளார். பாம்புகளை மீட்கும் வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விரைவில் நலம் பெறப் பிரார்த்தனைகள் தெரிவித்து வருகின்றனர்.