மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ‌4 மகன்கள் இருக்கிறார்கள். இதில் கடைசி மகன் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளான். இந்த சிறுவன் தன்னுடைய தந்தையிடம் ஒரு ஐபோன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதாவது கல்வி சம்பந்தமாக போன் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தந்தைக்கு கடன் இருப்பதால் போன் வாங்கி கொடுக்க முடியவில்லை. தன்னுடைய வறுமை நிலையை மகனிடம் எடுத்துச் சொல்லியும் அதனை சிறுவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

சிறுவனை காணாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில் அப்போது தன் மகன் ஒரு மரத்தில் தூக்கில் தொங்குவதை தந்தை பார்த்தார். இதனால் அதே மரத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்த நிலையில் காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இறுதி சடங்கு நடந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.