
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜேஸராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதலைமுத்து. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். ஜேசுராஜ் சின்னமலை பகுதிக்கு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது சின்னமலை பகுதியில் மதலைமுத்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். யானை மிதித்து அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மதலைமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.