
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.