
தமிழகத்தில் ஒன்றரை கோடி லிட்டர் அளவு பால் உற்பத்தியை பெருக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வட்டி இல்லா கால்நடை பராமரிப்பு கடன் கடந்த 2023 ஆம் ஆண்டு அளித்துள்ளோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பால் உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பு 21 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் சராசரியாக இரண்டே கால் கோடி லிட்டர் அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டு 36 லட்சம் லிட்டர் அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் தரத்தை உயர்த்துவதன் மூலமாக உற்பத்தியை பெருக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.