தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது இறப்பிற்கு நடிகர் வடிவேலு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பல தரப்பினர் பேசி வந்தனர்.

இதனை தொடர்ந்து வடிவேலு மற்றும் விஜயகாந்துக்கு உள்ள கருத்து வேறுபாடு அவர்களின் தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, ஆனால் இறுதி சடங்குக்கு போக முடியவில்லை என்றாலும் வடிவேல் அறிக்கை கொடுத்திருக்கலாம். வாழ்க்கையில் நமக்கு எதிரி என்று யாரும் கிடையாது. எல்லோரும் கலைஞர்கள் தான். அதனால் அவர் ஆறுதலுக்காக அறிக்கை கொடுத்திருக்கலாம் என நடிகர் ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.