தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் காவலரான கங்காராம் என்பவர் தனது நண்பரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மாடிக்கு லிப்டில் செல்லலாம் என நினைத்தார். அப்போது லிப்ட் வருவதற்கு முன்பே கதவு திறந்ததால் கால் தவறி கங்காராம் உள்ளே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த கங்காரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

லிப்டை சரியாக பராமரிக்காதது தான் விபத்துக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் கங்காராமின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.