தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு 40 வயது ஆட்டோ ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயதான மனைவி இருக்கும் நிலையில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

இதன் காரணமாக அவர்கள் தங்கள் உல்லாச வீடியோவை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த யோசனை முதலில் கணவனுக்கு வந்த நிலையில் அதனை தன் மனைவியிடம் கூற அவரும் சம்மதித்தார். இதற்காக அவர்கள் தங்கள் வீட்டில் ஒரு தனி அறையில் விலை உயர்ந்த ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

பின்னர் முகமூடி அணிந்து கொண்டு இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை பதிவேற்றம் செய்ய ஒரு செயலியை உருவாக்கினர். இந்த செயலியில் அவர்களின் நேரடி உல்லாச வீடியோவை பார்ப்பதற்கு 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் என கட்டணம் நினைத்த நிலையில் பலரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ததோடு உல்லாச வீடியோக்களை பார்ப்பவர்கள் அவர்களுக்கு பணத்தை அனுப்பினர்.

இதனால் அவர்களது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். பல மாதங்களாக இது தொடர்ந்த நிலையில் போலீசின் கவனத்திற்கு தற்போது தான் இந்த விவகாரம் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்து கேமராக்களை பறிமுதல் செய்ததோடு தம்பதியையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.