
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு நேற்று அறிவித்தது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்ன மொட்டு இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. மே 1ம் தேதி வரை வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டுகளை மாற்றிக்கொள்ள கெடு விதிக்கப்பட்டுள்ளது.