இந்தியாவில் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் பயனடைந்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

விவசாயிகள் 7 சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை உரிய காலத்தில் கடன் பெற்றுக் கொள்ள முடியும். விவசாயிகள் எந்தவிதமான பாதுகாப்பு வைப்புத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தினால் மூன்று சதவீத வட்டி சலுகை கிடைக்கும். இது பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கடன் குறித்த விவரங்களை அறிய உள்ளூர் வங்கிகளை விவசாயிகள் அணுகலாம்.