
ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு இளைஞர் ஐஏஎஸ் அதிகாரி, ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். திமான் சக்மா என்ற இந்த அதிகாரி, தரம்கரில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். ஒரு தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில், ஒடிசா விஜிலென்ஸ் துறை அவரை கைது செய்துள்ளது.
புகார்தாரரை தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அழைத்த திமான் சக்மா, ரூ.10 லட்சம் லஞ்சத்தொகையை மேசை டிராயரில் வைத்து வாங்கியுள்ளார். இது மொத்தமாக அவர் கேட்டிருந்த ரூ.20 லட்சம் லஞ்சத் தொகையின் முதல் கட்டமாக கூறப்படுகிறது. அவரின் வீட்டில் சோதனை நடத்திய விஜிலென்ஸ் அதிகாரிகள், மேலும் ரூ.47 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது ஊழல் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதான திமான் சக்மா, 2021ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒடிசா மாநிலத்துக்கு பணியமர்த்தப்பட்டவர். இந்நிலையில், அவருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் 1988 மற்றும் 2018 திருத்தச் சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் வழக்கு எண் 6/2025 பதிவுசெய்யப்பட்டுள்ளது. திமான் சக்மா லஞ்சம் வாங்கியதைக் குடியரசு அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.