
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல் முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேல்முறையீடு செய்து தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட 1.48 லட்சம் பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வங்கி கணக்கு சரியானதுதானா என்று அறிந்து கொள்ள நேற்று ஒரு ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்ட நிலையில் அந்தப் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு நேற்று வந்திருந்தால் இன்று மாலைக்குள் உங்கள் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வந்து சேரும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி இன்று நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.