தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டிற்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் மாலை நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டி தீர்க்கிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.