
பிரம்மானந்தம் பட நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பங்கேற்றார். அவர் கூறியதாவது, என் மகன் ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என பயமாக உள்ளது. நான் வீட்டில் இருக்கும் போது என்னை சுற்றி என் பேத்திகள் இருப்பது போல உணர முடியவில்லை. ஏதோ லேடீஸ் ஹாஸ்டலில் வார்டனாக இருப்பது போல உணர்கிறேன்.
வாரிசாக ஆண் குழந்தை வேண்டும். குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம் சரணுக்கு ஆண் குழந்தை கிடைக்க வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார். பெண் குழந்தை வேண்டாம் ஆண் குழந்தை தான் வேண்டும் என கூறியதால் அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.