உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பன்று பிரதமரின் மைண்ட் வாய்ஸ் தனக்குக் கேட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் விசிக மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அவர், ராமர் கோயில் திறப்பன்று கருவறையில் பிரதமர் மோடி கால் இடறியது.

அந்த சம்பவத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு, ராமரை வைத்து அரசியல் செய்வதாகவும், அதற்காக தன்னை மன்னித்துவிடும்படியும் கூறிய பிரதமரின் மைண்ட் வாய்ஸ் தனக்குக் கேட்டதாகவும் கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.