
கட்டக் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தில், ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு உயிரைக் காப்பாற்றி, பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த 44 வயது பயணி ஒருவர், இயங்கிக் கொண்டிருந்த கன்னியாகுமரி–திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற போது, தவறி வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
VIDEO | Cuttack: A Railway Constable displayed exceptional bravery and presence of mind by saving a 44-year-old passenger from Mirzapur, West Bengal, who slipped while attempting to board the moving Kanyakumari–Dibrugarh Express.
As the train was already in motion, the passenger… pic.twitter.com/ShOYqnmr6G
— Press Trust of India (@PTI_News) June 5, 2025
ரயிலுக்கும் மேடைக்கும் இடையே விழும் தருவாயில் இருந்த அந்த நபரை, அருகில் கண்காணித்துக் கொண்டிருந்த RPF கான்ஸ்டபிள் ஒருவர் விரைந்து செயல்பட்டு அவரை பிடித்து மேலே இழுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த பயணிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதுடன், அவர் உடனடியாக மருத்துவக் காப்பீடு பெற்றார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த RPF கான்ஸ்டபிளின் செயலை பாராட்டி, அவர் இல்லையென்றால் பயணியின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.