ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன். கட்டிட மேஸ்திரியான கணேசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். நேற்று இரவு கணேசன் அரச்சலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சிலருடன் அமர்ந்து மது குடித்தார். இதனையடுத்து வார சந்தை செயல்படும் இடத்தில் தலையில் படுகாயங்களுடன் கணேசன் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகிலேயே ரத்த கரையுடன் பெரிய கற்கள் இருந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்குபதிவு செய்த போலீசார் மது குடிக்கும் பிரச்சனை காரணமாக கணேசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.