கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் புறநகர் பகுதியில் ஒரு பெற்றோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி கடந்த 31ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் மர்ம நபர்கள் மூவர் நுழைந்து சிறுமிக்கு கேக் சாப்பிட கொடுத்துள்ளனர். அவர்கள் சிறிது நேரம் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கத்தியை காட்டி மிரட்டினர். தொடர்ந்து பள்ளி வளாகத்திலேயே ஒரு மறைவான இடத்திற்கு குழந்தையை தூக்கி சென்று மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்த சிறுமியிடம் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர்கள் மிரட்டியதால் பயந்து போன சிறுமி வீட்டிற்கு சென்றும் யாரிடமும் விஷயத்தை கூறவில்லை. ஆனால் மறுநாள் காலையில் சிறுமிக்கு அதிக அளவில் வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதை பார்த்து பதறிப்போன சிறுமியின் சித்தி விசாரிக்கவே நடந்த விவரங்கள் தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியின் சித்தி  காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த மூவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.