தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது மற்றும் படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகின்றார். இவரால் இன்று சமூகத்தில் ஏராளமான குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவரின் அறக்கட்டளைக்கு பலரும் டொனேஷன் கொடுத்து வரும் நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய டிரஸ்ட்க்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் எனவும் தன்னுடைய குழந்தைகளை தானே பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

NewsBugz இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@newsbugz_official)