தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்க்கரை மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்கள் என அனைவருக்கும் நிபந்தனை இன்றி ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் வேஷ்டி சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.