மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில், ஒரு கார்  கட்டுப்பாடு இழந்து நடந்த ஹிட் அண்ட் ரன் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஒரு உயரவேக லைட் ப்ளூ கலருள்ள ஹூண்டாய் கார், ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரை மோதிய பிறகு, எதிரே வந்த மோட்டார் சைக்கிளை நேராக மோதியது. அந்த பைக்கிள்  வந்த இளைஞர் காற்றில் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தார்.  அதே சமயம் நடந்து சென்றுகொண்டிருந்த  மூன்று பெண்கள்  அந்த பைக் அவர்களை  பாய்ந்து வந்த போதும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

“>

 

விபத்துக்குப் பிறகு அந்த கார் அருகிலிருந்த மின்கம்பத்தையும் மோதியது, அங்கிருந்து தீப்பொறிகள் வெளிவந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் இரண்டு மணி நேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. காயமடைந்த இளைஞர் வலியுடன் கதறிக் கொண்டிருந்தார், அவரை அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்டனர். அந்த காட்சிகள் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஒரு கணம் கார் நிறுத்தி அருகிலிருந்த ஒருவரை மோதம் விதமாக, உடனே வண்டியுடன் தப்பிச் சென்றார். தற்போது அந்த காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. போலீசார் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, விபத்தில் ஈடுபட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.