பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 30,000 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும் தமிழக சுயேட்சை வேட்பாளர்களில் அதிகமாக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளருமான ஹரி நாடார் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குற்ற வழக்கில் பெங்களூரு மத்திய பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடார் மீது கேரளாவை சேர்ந்த இஸ்மாயில் என்ற தொழிலதிபர் மோசடி புகார் ஒன்றை தமிழக காவல்துறையினரிடம் வழங்கியிருந்தார். இந்நிலையில் சென்னை மத்திய பிரிவு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு அக்ரஹார மத்திய சிறையில் சிறைவாசியாக இருந்து வரும் ஹரி நாடாரை கைது செய்தனர். இந்நிலையில் ஓரிரு தினங்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.