தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்  இணைந்துள்ளனர். இதனை தற்போது குதிரை பேரம் என்று அதிமுக கட்சியின் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் திமுக தலைவர் திமுக ஸ்டாலினும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’. பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.