மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் மியான்மர் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து கடந்த 5-ம் தேதி முதல் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மணிப்பூர் எல்லை மாவட்டமான சுராசந்த்பூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியது. சுமார் 7.75 கிலோ எடையுள்ள அந்த போதைப்பொருளின் மதிப்பு 55 கோடி ஆகும். இந்த போதைப் பொருட்களுடன் சேர்த்து ரூபாய் 35 லட்சம் பணமும் சோதனையில் சிக்கியது.

பணம், போதை பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உபயோகித்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.