தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 1 ஆம் தேதி வெப்ப அலை புதிய உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அவர் மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மே 5-ம் தேதி உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.