மேற்கு வங்காளம் மாநிலம் பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்திலுள்ள குல்டி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தரை பாலத்திற்கு கீழே எரிந்து கொண்டிருந்த கேபிள்களை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதத்தின் அளவு போன்றவை தீயை முழுமையாக அனைத்த பிறகுதான் மதிப்பிடப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.