காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான கிரிஜா வியாஸ் (79) நேற்று உடல் நலக்குறைவினால் காலமானார். கடந்த மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற ஒரு துப்பட்டா நிகழ்வில் கிரிஜாவின் துப்பட்டா மீது தீப்பிடித்தது. இதில் அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவருடைய இறுதிச் சடங்கு இன்று உதய்பூரில் நடைபெறுகிறது. மேலும் இவருடைய மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.