அதிமுக நிர்வாகியும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன், இன்று காலை நெல்லையில் காலமானார் அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், 2000-ம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்படவே, திமுகவில் இணைந்தார் 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ. ஆக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2016ல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் இணைந்தார். மேலும் இவருடைய மறைவுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இவருடைய மறைவுக்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி நீண்ட காலம் சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்த அவருடைய மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நிர்வாகிகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.