
பீகார் மாநிலத்தின் போத்கயா பகுதியில், இரண்டு வெளிநாட்டு யூட்யூபர்கள் வீதியில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு ரீல் வீடியோவுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, உள்ளடக்கத் தவிர்ப்பை மையமாகக் கொண்டு விவாதம் உருவானதாக கூறப்படுகிறது. இக்கருத்து வேறுபாடு சற்று நேரத்தில் தகராறாக மாறி கைகலப்பில் முடிந்தது. அந்நேரம் அவர்களில் ஒருவர் திடீரெனஒரு கத்தியை எடுத்து மற்றொருவரை தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மோதலின் வீடியோக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரபலமாக வேண்டும் என்று ஆசையில் இப்படி உயிரை எடுக்கும் அளவிற்கு துணிவதா என பலரும் விமர்சித்து வருகின்றனர்
रील बनाने के लिए बोधगया में बीच सड़क पर भिड़ गए दो विदेशी यूट्यूबर, जमकर चले लात-घूंसे, चाकूबाजी में एक गंभीर,घायल यूट्यूबर को इलाज के लिए अस्पताल में भर्ती कराया गया है#BodhGaya #YouTuberFight #ViralVideo #ForeignYouTubers #StreetFight #CrimeNews #BiharNews #YouTuberClash… pic.twitter.com/w41swwBj01
— FirstBiharJharkhand (@firstbiharnews) June 13, 2025