தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சுவாதி. இவர் நாடோடிகள் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் விகாஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனார். ஆனால் அந்த சமயத்தில் தன்னுடைய கணவருடன் எடுக்கப்பட்ட போட்டோக்களை அவர் டெலிட் செய்ததால் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் பரவிய நிலையில் அதனை சுவாதி மறுத்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவரை சுவாதி அன்பாலோ செய்துள்ளார். சமீபகாலமாக பிரபலங்கள் விவாகரத்து செய்வதற்கு முன்பாக சோசியல் மீடியாவில் அன்பாலோ செய்கிறார்கள். அதன் பிறகு விவாகரத்து குறித்து அறிவிப்பதால் தற்போது நடிகை சுவாதியும் கணவரை பிரிவதாக கூறப்படுகிறது. மேலும் சமீபகாலமாக திரையுலகில் விவாகரத்துகள் என்பது அதிகரித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.