ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் ரேஷ்மா. இதையடுத்து அவர் பூவே பூச்சூடவா எனும் தொடரில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிக்கும்போது அதே சீரியலில் நடித்த மதன் என்பவருடன் காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் சென்ற 2021-ம் வருடம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் இருவரும் விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தற்போது ரேஷ்மா ராடான் நிறுவனம் இயக்கத்தில் கிழக்கு வாசல் எனும் தொடரில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் இத்தொடரின் புரொமோ சமீபத்தில் தான் படமாக்கப்பட்டது. இப்போது மதன்-ரேஷ்மா இருவரும் 2-வது முறை துளசி மாலை அணிந்து திருமணம் செய்துகொண்ட ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by ?ᴍᴀʀᴇ? (@madhanreshu_forever)