மணிரத்னம் டைரக்டு செய்த ராவணன் திரைப்படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாராய் முதல் முறையாக சேர்ந்து நடித்தனர். அதோடு இந்தியிலும் ராவணன் படம் வெளியானது. இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் மற்றும் 2-ஆம் பாகங்களிலும் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஐஸ்வர்யாராய் நந்தினியாகவும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் புது படம் ஒன்றில் நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், இதுபற்றி ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த வேறு விவரங்கள் எதுவுமே வெளியாகவில்லை.