
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமான அமைந்துள்ளது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஒரு மாணவி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவிக்கு ஆசிரியர் கணேசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாயார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது தான் ஆசிரியர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.