திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(27) கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீபிகா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு கணவன் மனைவி இருவரும் கோவில்பாளையத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.  நேற்று சரவணன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு ஒரு சில காரணங்களுக்காக வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

அப்போது தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தீபிகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.