செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பண்டிதமேடு பகுதியில் பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதனால் ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. காரில் வந்த இரண்டு பேரை பிடித்து அந்த பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.