திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திண்டிவனம் வட்டம் பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டையை சேர்ந்த சிறுவன் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்த சிறுவன் தேவேந்திரனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ரூபாய் 3 லட்சம் வழங்க முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்