சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் ஆம்தாய் காதி இரும்பு தாது சுரங்கத்தின் அருகே மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலின் போது அந்த வழியாக வந்த மூன்று தொழிலாளர்களில் ரித்தேஷ் கக்தா மற்றும் ஷ்ரவன் கக்தா என இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் உமேஷ் ராணா என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.