தமிழ்நாடு அரசானது மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக  மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி மாற்றுத்திறனாளி யாரேனும் இறக்க நேரிட்டால் அவருடைய  ஈமச் சடங்கிற்காக அவரின் வாரிசுத்தாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

இதை பெறுவதற்கு தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் வாரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நிர்வாக அலுவலகத்தை அணுகவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.