சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ய  புதிய திட்டமிடுகின்றார்கள் என்றும்  இதில் பலர் இது எங்களுடையது என அதற்கு உரிமை கோருகின்றனர் என்றும்,  சென்னையில் −100 கோடி மதிப்பிலான நிலத்தை நயினார் நாகேந்திரன் MLA மகன் நயினார் பாலாஜி மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி நயினார் பாலாஜி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும் தந்தை மீதும் அவதூறு பரப்பும் விதமாக ஒரு சிலர் கைக்கூலியாக செயல்படுவதாகவும், பொய் புகார் கூறிய அறப்போர் இயக்கம் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.