
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த நிலையில் திமுக கட்சியின் உறுப்பினர்கள் மூன்று பேர் போட்டியிடும் நிலையில் ஒரு சீட் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது அதிமுகவும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களை அறிவித்துள்ளது.
அதன்படி அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏவும் வழக்கறிஞருமான இன்பதுரை மற்றும் முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. சமீபத்தில் எல்.கே சுதீஷ் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய நிலையில் இதைப்பற்றி அவருடன் பேசி விட்டதாக தற்போது கே.பி முனுசாமி தெரிவித்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் கண்டிப்பாக தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மாநிலங்களவை சீட் வேண்டுமென்று வலியுறுத்தி வந்த நிலையில் சீட் கொடுக்கப்படாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.