
புதிய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில் மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களும், மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலின் போது செய்து கொண்ட உடன்பாடு அடிப்படையில் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.