
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. District Resource Person பணிக்கு காலியாக உள்ள இரண்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என கூறியுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
30 வயதுக்கு உட்பட்ட நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு வேலைையின் அடிப்படையில் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் 10.9.2024 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் இறுதி நாள் முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.