
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் கரன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளர். ஒரு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் இவருக்கு தற்போது அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி நோட்டீஸ் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது 32 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று இவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கரன்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் குறைந்த வருமானம் வாங்கும் தொழிலாளிகளுக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது ஜிஎஸ்டி நோட்டீஸ் இதுவாகும்.
அதாவது ஒரு ஜூஸ் வியாபாரிக்கு 7.54 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் ஒரு முட்டை வியாபாரிக்கும் இதேபோன்று பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அவர்களின் பெயரில் போலியான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு தொழிலாளிக்கு இதே போன்று அதிகவரி கேட்டு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.