
சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த குருணை மருந்தை எடுத்து பூவரசன் தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வமணி உடனே மருந்தை தட்டி விட்டு தனது குழந்தையை தூக்கி வாயை கழுவி விட்டு கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மகனை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தான். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.