சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நேற்றிரவு மாடு முட்டியதில் காவலர் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் சென்ற 5 பேரை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் கிஷோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கால்நடைகளை முறையில்லாமல் பராமரிப்பது, கால்நடைகளை வைத்து மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.