
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சுசிலா (80). சுசிலா தனது வீட்டின் பின்புறம் உள்ள மாங்காய் தோப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த நேற்று மாலை 5 மணி அளவில், கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (19) எனும் இளைஞர் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது போதையில் இருந்த நந்தகுமார், மூதாட்டி சுசிலாவிடம் அத்துமீறி நடந்துகொண்டு, மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுசிலா கூச்சலிட, ஆத்திரமடைந்த நந்தகுமார், அவரை தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். இதில் சுசிலாவின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியான நிலையில், இது பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.