
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபத்து பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்த போது பிரசாந்த் குமார் மறைந்திருந்து பார்த்ததுடன், செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை பார்த்து சிறுமி அலறி சத்தம் போட்டதால் பிரசாந்த் குமார் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் சிறுமி நடந்த விஷயம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரசாந்த் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.