தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி நடைபெறும் மறு தேர்வில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் நடை போடுங்கள்.