
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் வீட்டிற்குள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணவன் மனைவி இருவரையும் யாராவது கொலை செய்தார்களா? அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.