சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் உறைந்ததால் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி ஆர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வீதம் இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம்.